தமிழகத்தில் கனமழை நீடிப்பு: கல்லூரி திறப்பு தள்ளிபோகுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 06, 2020

Comments:0

தமிழகத்தில் கனமழை நீடிப்பு: கல்லூரி திறப்பு தள்ளிபோகுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில், 'புரெவி' புயலால், பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் சூழலில், கல்லுாரிகள் நாளை திறக்கப்பட உள்ளன. மழைக்காலம் முடியும் வரை, கல்லுாரி திறப்பை ஒத்திவைக்க, பெற்றோர் வலியுறுத்தினர்.
வங்க கடலில் உருவான, 'புரெவி' புயல், தென் மாவட்டங்களில் மிக கன மழையை கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் மன்னார் வளைகுடா அருகே வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டியது. தமிழகத்தின் பல மாவட்டங்களில், கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், மேலும் இரு நாள் மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நாளை, அனைத்து கல்லுாரிகளில், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வகுப்பு தொடங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கல்லுாரி நிர்வாகங்கள், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளன. கொரோனா சூழலில், மாணவர்களை கல்லுாரிக்கு அனுப்புவதிலேயே, பல பெற்றோருக்கு தயக்கம் நீடிக்கிறது.அதிலும், விடுதிகளில் தங்கி படித்த மாணவ, மாணவியரை திரும்ப அனுப்புவதில், விருப்பமில்லாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, மூச்சுத்தொந்தரவு உள்ள மாணவ, மாணவியரை வெளியூருக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு விருப்பமில்லை. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் சூழல் உள்ளதால், மழைக்காலம் முடியும் வரை, கல்லுாரி திறப்பை ஒத்திவைக்க பெற்றோர் வலியுறுத்தினர். மாணவர்களின் நலன் கருதி, கல்லுாரி திறப்பை தள்ளிவைக்க முதல்வர் முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பிலும், கல்லுாரி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன சொல்கிறார் அமைச்சர் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:தமிழக கல்லுாரிகளில், இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, நாளை முதல், கல்லுாரி துவங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். புயலால், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பாதிப்புகளை அரசு சீரமைத்து வருகிறது. இருப்பினும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரை படி, நாளை கல்லுாரிகள் திறக்கப் படும்.புயலால், கனமழை தொடரும் பட்சத்தில், அப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, முதல்வர் அறிவுரைக்கு ஏற்ப, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், நாளை கல்லுாரிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்- 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews