மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஒரு மாதமாக முடிவெடுக்காதது ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 15, 2020

Comments:0

மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஒரு மாதமாக முடிவெடுக்காதது ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அச்சம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் முத்துக்குமார் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, ‘‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க 2 வார கால அவகாசம் தேவை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரர்கள் குறிப்பிடும் விவகாரம் அவசரமானது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து ஒரே முடிவை எடுத்துள்ளனர். 2 நாட்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தாமதமாக முடிவெடுத்தால் சாதாரண அரசுப்பள்ளி மாணவர்களை பாதிக்காதா? 41 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களில் ஒற்றை இலக்கத்தில் தான் மருத்துவ இடங்கள் கிடைக்கிறது. இந்த ஆண்டே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்புள்ளதா’’ என்றனர். அரசுத் தரப்பில், ‘‘நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகும், அதற்கடுத்தும் பல நடைமுறைகள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘செப். 15ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. அன்றே ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் முடிவெடுக்கவில்லை. இது சாதாரண ஏழை மாணவர்களின் எதிர்கால நலன் சார்ந்தது. இதில் விரைவாக முடிவெடுக்க வேண்டியது அவசியம்’’ என்றனர். அரசுத் தரப்பில் அக். 16 (நாளை) வரை அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை அக். 16க்கு ஒத்தி வைக்கிறோம். அப்ேபாது ஆளுநரின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews