சார்நிலை அலுவலருக்கான கணக்குத்தேர்வு பாகம் -1 - 10.3.2020க்கு முன் தேர்ச்சி பெற்று, முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் - தொடர்பாக - நிர்வாகம் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 17, 2020

Comments:0

சார்நிலை அலுவலருக்கான கணக்குத்தேர்வு பாகம் -1 - 10.3.2020க்கு முன் தேர்ச்சி பெற்று, முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் - தொடர்பாக - நிர்வாகம் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐயா/அம்மையீர், பொருள்: நிர்வாகம் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் - சார்நிலை அலுவலருக்கான கணக்குத்தேர்வு பாகம் -1 - 10.3.2020க்கு முன் தேர்ச்சி பெற்று, முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் - தொடர்பாக, பார்வை: அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் (அ.வி.IM) துறை, நாள். 10.3.2020. பார்வையில் காணும் அரசாணையில், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர்களுக்கு சார்நிலை அலுவலருக்கான கணக்குத்தேர்வு பாகம் -1ல் தேர்ச்சி பெற்றமைக்காக வழங்கப்பட்டு வந்த ஒரு முன் ஊதிய உயர்வினை 10.3.2020 முதல் இரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட அரசாணை பத்தி.6 (vi)-ல் 10.3.2020-க்கு முன்னர் கணக்குத்தேர்வு பாகம் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு நிதித்துறை ஒப்புதலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறை அனுமதி வழங்கலாம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 10.3.2020க்கு முன்னர் கணக்குத்தேர்வு பாகம் -1ல் தேர்ச்சி பெற்று முன் காதிய உயர்வு வழங்கப்படாத இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் தொடர்பான விவரங்களை, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 31.10.2020-க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews