புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு கால நீட்டிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 18, 2020

Comments:0

புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு கால நீட்டிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டு, இயந்திர மின்னணுவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.இக்கல்லூரியில் இந்தப் பாடப் பிரிவுகள் இரண்டாம் சுழற்சி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று அதில் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.மாணவ, மாணவியா் நலன் கருதி, அக்.31-ஆம் தேதி வரை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரின் ஆணையின்படி சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்குக் கல்லூரியை அணுகலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews