அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு தரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அரசியல் கட்சி தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடந்த பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்தால் 69 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்தி அதற்கு சிறப்பு அந்தஸ்தை அதிகரிக்க ரூ.1000 கோடி என்ற தொகையை செலவிட தமிழக அரசும் தயாராக இல்லை. அதே நேரத்தில் இதற்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருவதற்கான செலவினங்கள் பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரங்களின் மூலம் திரட்ட உள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், கல்லூரிகளுக்கு இணைப்பு தர பெறப்படும் கட்டணம் என ஆண்டுக்கு ரூ.314 கோடியை திரட்ட முடியும். 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடியை திரட்ட முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து பெற நிதி திரட்டுவது துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.