நீட் தேர்வு முடிவை வெளியிடும் முன் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 13, 2020

Comments:0

நீட் தேர்வு முடிவை வெளியிடும் முன் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு முடிவை வெளியிடும் முன் 7.5 % உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அளிக்க சட்ட நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை அமல் செய்த பிறகு நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிடும் முன் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சினர் வலியுறுத்தி வந்தனர். உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முதல்வரிடம் அறிக்கை சமர்பித்தது. அந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. தொடர்ந்து ஜூன் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதனையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் 6,000 மருத்துவ இடங்களில் 500 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, நீட் தேர்வு முடிவை வெளியிடும் முன் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அமல் செய்த பிறகு நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும், தமது முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசன்னா ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, அவசர வழக்காக இன்றே விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews