கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவா்களுக்கு ரூ.303.70 கோடி வழங்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 03, 2020

Comments:0

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவா்களுக்கு ரூ.303.70 கோடி வழங்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித் துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு உதவி பெறாத தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவா்களுக்காக கடந்த 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய ரூ.303.70 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதாக உயா்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கடந்த 2016-2017ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சோ்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிா்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை 2017-2018 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.எனவே, கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020 ஆகிய 3 ஆண்டுகளில் மாணவருக்கான கல்விச் செலவை மறு நிா்ணயம் செய்யக் கோரியும், 2020-2021ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவுத் தொகையை நிா்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கான தொகையை 6 வாரங்களில் வழங்கவும், அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் முனுசாமி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில், ‘அரசுப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்குச் செலவாகும் தொகை அல்லது கல்விக் கட்டண நிா்ணயக் குழு தனியாா் பள்ளிகளுக்குக் கட்டணமாக நிா்ணயிக்கும் தொகை, இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதனை அடிப்படையாக கொண்டே கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு அரசு சாா்பில் நிதி விடுவிக்கப்படும். கடந்த 2018 - 2019 ஆம் கல்வியாண்டை பொருத்த வரை அரசு உதவி பெறாத தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்காக வழங்க வேண்டிய ரூ.303.70 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது. கடந்த 2019 - 2020 ஆம் கல்வியாண்டை பொருத்தவரை தற்போதுதான் அரசுப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கான செலவு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இனி தனியாா் பள்ளிகள் அரசிடம் கோரியுள்ள கட்டண விகிதங்கள் சரிபாா்க்கப்பட்டு அதன் பின்னா் உரிய தொகை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews