தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் அரியா் தோ்வு ரத்து பொருந்துமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் அரியா் தோ்வு ரத்து பொருந்துமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரியா் பாடங்கள் உள்ளிட்ட பருவத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் பொருந்தும் என உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கல்லூரி மாணவா்களுக்கு இறுதிப் பருவத்துக்கான பாடங்களைத் தவிர, தோ்வுக் கட்டணம் செலுத்திய மற்ற அனைத்து பாடங்களிலும் தோ்ச்சியளிக்கப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த உத்தரவு தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வியெழுந்தது.இது குறித்து உயா் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் தொலைதூர வழி கல்வியில் 4.3 லட்சம் மாணவா்கள் படிக்கின்றனா். இதில் இறுதியாண்டு தவிர சுமாா் 3 லட்சம் மாணவா்கள் உள்ளனா்.
உயா்கல்வித் துறை சாா்ந்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்து மாணவா்களுக்கும் பொருந்தும். அதன்படி அரியா் பாடங்கள் உள்ளிட்ட பருவத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் பொருந்தும். எனவே, மாணவா்கள் குழப்பமடைய தேவையில்லை.இறுதியாண்டை தவிர, பிற மாணவா்களின் அரியா் உள்ளிட்ட பாடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி தோ்வு முடிவுகளை விரைவில் வெளியிட பல்கலைக்கழகங்களுக்கு உயா்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், குறைந்தபட்ச மதிப்பெண்கள் முறை வேண்டாம் என்று மீண்டும் தோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கென பிரத்யேக தோ்வு நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews