Breaking

Monday, September 21, 2020

தொடக்கக் கல்வி - 2019 - 2020ம் கல்வியாண்டு - அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் - தொடக்கப்பள்ளியில் பயின்ற 5ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயின்ற 8ம் வகுப்பு மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உடனடியாக மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கி அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
// மிக மிக அவசரம் || வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.3125/ஆ2/2020 நாள் 17.09.2020
--- பொருள் :
தொடக்கக் கல்வி - வேலுார் மாவட்டம் - 2019 - 2020ம் கல்வியாண்டு - அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் - தொடக்கப்பள்ளியில் பயின்ற 5ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயின்ற 8ம் வகுப்பு மாணவர்கள் - 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உடனடியாக மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கி அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை /அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு

வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2019 - 2020ம் கல்வியாண்டில் பயின்ற 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களில் சிலர் இன்றைய தேதி வரை மாற்றுச் சான்றிதழ் (TC) பெற்று அருகாமையிலுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பில் சேர்க்கை மேற்கொள்ளப்படாமவுள்ளனர். அவ்வாறானா மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரை தொடர்பு கொண்டு சார்ந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கி உடனடியாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை / அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதே போல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் எவரேனும் நாளது தேதியில் எந்தவொரு பள்ளியிலும் சேராமல் இருப்பின் உடனடியாக 11ம் வகுப்பில் சேர்க்கை மேற்கொள்ள அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளிக்கு அருகிலுள்ள இதுநாள் வரை பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர்களை அணுகி ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்திடுமாறும் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா நோட்டு புத்தகம், விலையில்லா புத்தகப்பை, விலையில்லா சீருடை உள்ளிட்ட கல்விசார் உபகரணங்களையும் மாணவர்களுக்கு உடன் வழங்கிடுமாறும் மற்றும் மேற்கண்ட செயல்பாடுகளை தவறாமல் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுார்.
பெறுநர்
அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலுார் மாவட்டம்.
நகல்
1. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.
(தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
2. வட்டாரக் கல்வி அலுவலர், வேலுார் மாவட்டம்.
(தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog