பள்ளிக்கல்வி - சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தேவைப்படும் தொகை விவரங்கள் கோருதல் – சார்ந்து - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

பள்ளிக்கல்வி - சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தேவைப்படும் தொகை விவரங்கள் கோருதல் – சார்ந்து - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்,
ந.க.எண் - 4763/ஆ3/2020 நாள் - 27.08.2020)
பொருள் -
பள்ளிக் கல்வி - சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தேவைப்படும் தொகை விவரங்கள் கோருதல் – சார்ந்து. பார்வை - சென்னை 6 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண் – 024285/T2/இ3/2020 நாள் -19.08.2020
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தேவைப்படும் சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை சார்ந்த விவரங்கள் பார்வையில் காணும் செயல்முறைகளில் கோரப்பட்டுள்ளது. எனவே மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் இணைப்பில் காணும் Ms Excell (with Formula) படிவத்தில் கோரப்படும் விவரங்களை இருநகல்கள் பெற்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு கட்டண இழப்பீட்டு தொகை கோரப்பட்டுள்ளதா என்ற கணக்கினை சரிபார்த்தல் வேண்டும். தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை கோரிக்கையின் அடிப்படையில் Proforma I, II, III ஆகியவற்றை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கணினி வழியே தயார் செய்யவேண்டும். மேற்காணும் மூன்று படிவங்களையும் கணினி வாயிலாக தயார் செய்த பின்னர் அதன் அச்சு நகலுடன், தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விவரங்களை ஒப்புநோக்கி சரிபார்த்த பின்னர், மேற்படி கோரப்பட்டுள்ள மூன்று படிவங்களை அச்சு நகல் எடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் 10.09.2019க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும். ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்
1. Proforma I, II, III (மாவட்டக் கல்வி அலுவலர் கையொப்பம், முத்திரையுடன்)
முதன்மைக் கல்வி அலுவலர்க்க) திருவள்ளூர். பெறுநர் :
மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பொன்னேரி, மற்றும் அம்பத்துார்.
நகல்
பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.
நகல் :
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - (தங்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 07.09.2020-குள், 2 நகல் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews