டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை.! மத்திய உயர்கல்வி செயலர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 11, 2020

Comments:0

டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை.! மத்திய உயர்கல்வி செயலர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்திருப்பதான தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்லூதி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று அமித் காரே அறிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்றும், ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பள்ளி வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் காரே தெரிவித்துள்ளார்.அதேவேளை, கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும், கல்லூரி வகுப்புகள் தொடங்குவது தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் பள்ளிகளைத் திறப்பதற்காக எவ்வித காலத்தையும் மத்திய கல்வித் துறை நிர்ணயிக்கவில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பல மாநிலங்களில் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கும் சூழ்நிலை உருவாகவில்லை என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தாலும், இதுவரை எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே ஒரு யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து வேறு எந்த மாநிலமோ யூனியன் பிரதேசங்களோ விரைவில் பள்ளிகளைத் திறப்பதற்கான சூழ்நிலையில் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாத இறுதியில் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம் இது பற்றி முடிவு செய்தாலும் கூட, அது குறித்த அறிவுறுத்தலை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்க முடியும், அந்தந்த மாநில அரசுகள், சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews