முழு கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

முழு கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீதிமன்ற உத்தரவை மீறி, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், பள்ளி பொறுப்பாளர்கள் மீது, அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, முழு கல்விக் கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020-21ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீத தொகையை ஆகஸ்ட் 31க்குள் வசூலித்துக்கொள்ளலாம். மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்குள் வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழுக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட நேரிடும். அரசு இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். * எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். * உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழுக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட நேரிடும். * இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு உத்தரவால், கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு, ஏப்ரலில், வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், கட்டடங்கள் பராமரிப்பு செலவுக்கும், பணம் தேவைப்படுவதால், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்படி, மனுக்களில் கோரப்பட்டன.மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில், 40 சதவீத கட்டணமும், வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களில், 35 சதவீத கட்டணமும் வசூலித்துக் கொள்ள, நீதிபதி அனுமதி அளித்தார். இந்த இடைக்கால உத்தரவு, ஜூலை, 17ல் பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், வருவாய் துறை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, ஜூலை, 17ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இந்த மனுவுக்கும் பொருந்தும் என, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, கல்வித்துறை சார்பில் ஆஜரான, கூடுதல் பிளீடர் அன்னலட்சுமி, ''நீதிமன்ற உத்தரவை மீறி, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தும்படி, கல்வி நிறுவனங்கள் வற்புறுத்துவதாக, பெற்றோரிடம் இருந்து புகார்கள்வருகின்றன.
எழுத்துப்பூர்வமாக புகார்கள் அளிக்க, அவர்கள் தயங்குகின்றனர்,'' என்றார். அதைத் தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த பிரச்னையை, கடுமையாக கருதுகிறேன். வாய்மொழியாக வந்த புகார் அடிப்படையில், கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தப் பள்ளிகளின் விபரங்களை, நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனரும், அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தர விட்டார். அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை, வரும், 17க்கு, நீதிபதி தள்ளி வைத்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews