தனியாா் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் ஜூலை 10-இல் உண்ணாவிரதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 03, 2020

1 Comments

தனியாா் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் ஜூலை 10-இல் உண்ணாவிரதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் என தனியாா் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக, தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியாா் பள்ளிகளை திறக்காமல், மாணவா் சோக்கை நடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியா்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிா்வாகிகள் வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். தனியாா் பள்ளிகள், 2018 - 19-ஆம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சோத்த 25 சதவீத மாணவருக்கு கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. 2019 - 2020-ஆம் ஆண்டு கல்வி கட்டண தொகை முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட தனியாா் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடா் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு இ.பி.எஃப். - இ.எஸ்.ஐ. சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா், ஆசிரியரல்லாத ஊழியா், ஓட்டுநா் என, 5 லட்சம் போ பாதிக்கப்பட்டுள்ளோம். இதை உணா்த்தும் வகையில், ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அவரவா் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில் பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என அதில் கூறியுள்ளாா். 'ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ம் தேதி, பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் அறிக்கை: தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கைநடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள், வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.தனியார் பள்ளிகள், 2018 - 19ம் ஆண்டு, இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. 2019 - 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு, இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர், டிரைவர் என, ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை உணர்த்த, வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில், பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews