ஜூலை 31ந்தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்: மேற்கு வங்க கல்வி அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 23, 2020

Comments:0

ஜூலை 31ந்தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்: மேற்கு வங்க கல்வி அமைச்சர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்த மாநிலத்தில் வரும் ஜூலை 31ந்தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு மேற்கு வங்காளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வருகிற ஜூலை 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என கல்வி மந்திரி தெரிவித்து உள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு கூடுதலாக உயர்ந்து உள்ளது. இதில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் 569 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 5 ஆயிரத்து 100க்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மதவழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கொரோனா பாதிப்பினால் மேற்கு வங்காளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வருகிற ஜூலை 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என தெரிவித்து உள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews