இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால் சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல்: அண்ணா பல்கலை. விஷயத்தில் தமிழக அரசு முடிவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால் சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல்: அண்ணா பல்கலை. விஷயத்தில் தமிழக அரசு முடிவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் புதன்கிழமை ஆலோசித்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.அதன் படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த உயா் சிறப்பு கல்வி நிறுவனம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி 10 உயா்கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவற்றின் மேம்பாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தோ்வானது. அதேசமயம் இடஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டத்தை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுதொடா்பாக கடந்த ஆண்டு நவம்பரில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு உறுதி அளிக்கும்பட்சத்தில் சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் அளிக்க முடிவானது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது, இடஒதுக்கீட்டு அம்சங்களைப் பாதுகாப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆராய 5 அமைச்சா்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.ஆலோசனை: இந்தக் குழுவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். நிதி, சட்டம், உயா்கல்வித் துறை செயலாளா்களும் குழுவில் இடம்பெற்று இருக்கின்றனா். இந்தக் குழுவினா் அவ்வப்போது ஆலோசனை நடத்திய நிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சா்களும் பங்கேற்றனா். இடஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் உயா் சிறப்பு அந்தஸ்தை நிராகரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.இந்த விஷயத்தில் மே மாத இறுதிக்குள் கருத்தினைத் தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. புதன்கிழமை நடந்த முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews