Search This Blog
Monday, May 11, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காகச் சென்னையில் வசிப்பவர்கள் தங்களது உடல்நிலை குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவிடுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அதற்காக பிரத்யேக இணையதள பக்கத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 3,839 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மக்கள் தங்களது உடல்நிலை குறித்த விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது
அதன்படி http://covid19.chennaicorporation.gov.in/c19/Symptoms/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று உடல்நிலை குறித்த விவரங்களைப் பதிவிடலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சென்னை மக்கள் தங்கள் உடல்நிலை குறித்துத் தெரிவிக்க புதிய இணையதளம்
Tags
# CORONA
# IMPORTANT
# PEOPLE'S
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் - தமிழக வெற்றிக் கழகம்
‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ - மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்
பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84652679
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.