10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 13, 2020

Comments:0

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பின் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் கூறியுள்ளார். மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி 10-ம் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முற்றிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு நடத்தும் நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடையே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
மேலும் பிளஸ் 1 வகுப்புக்கான எஞ்சியுள்ள 3 தேர்வுகளையும் ரத்து செய்து அதற்காக குறிப்பிட்ட மதிப்பெண்கள் அளித்து தேர்ச்சி செய்ய வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பின் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. ஒத்திவைப்பு மட்டுமே தேர்வு ரத்து செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பள்ளிகல்வி துறை அறிவிப்பு- தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு; மேலும் தேர்வு ரத்து செய்யப்பட வில்லை - பள்ளிக்கல்வித்துறை தேர்வு நடைபெறும் தேதி ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன, ஆனால் ரத்து செய்யப்படவில்லை என்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு, பின்னர் அறிவிக்கப்படும் என்ற தகவலும் தற்பொழுது அரசிடம் இருந்து வந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews