ரேஷன் ஊழியர்கள் டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 24, 2020

Comments:0

ரேஷன் ஊழியர்கள் டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரேஷன் கடைகளில், இன்றும், நாளையும், அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பின், கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று, 'டோக்கன்' வழங்கும்படி, ரேஷன் ஊழியர்களை உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், மே மாதம் வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள், இம் மாதம், 27ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதனால், கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில், எந்த தேதி, என்ன நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய, 'டோக்கன்'களை, இன்றும், நாளையும், ரேஷன் ஊழியர்கள் வழங்க உள்ளனர்.
இந்நிலையில், 'டோக்கன் வழங்கும் இரு நாட்களிலும், வழக்கம் போல ரேஷன் கடைகளை திறக்க வேண்டும்; காலை, 11:00 மணி வரை, கார்டு தாரர்களுக்கு, இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். 'அதன்பின், ரேஷன் கடை ஊழியர்கள், டோக்கன் வழங்க செல்ல வேண்டும்' என, உணவு வழங்கல் துறை கமிஷனர், கலெக்டர்களுக்கு ற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews