போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கு மாவட்ட நூலங்களில் 31 வரை தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

Comments:0

போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கு மாவட்ட நூலங்களில் 31 வரை தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட மைய நுாலகங்களில், போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்த வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக பொது நுாலக இயக்குனர் குப்புசாமி, அனைத்து மாவட்ட நுாலக அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:வழக்கம்போல் நுாலகம் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. நுாலக வாசலில், கை கழுவும் கிருமிநாசினி, சோப்பு, தண்ணீர் வைக்க வேண்டும். பணியாளர், வாசகர், உறுப்பினர்கள் நுாலகத்துக்குள் நுழையும் முன், தங்கள் கைகளை கழுவ வேண்டும்.நாளிதழ், பருவ இதழ் படிக்கும் வாசகர்கள், அருகருகே அமர்ந்து படிக்காமல், கூடுதல் இடைவெளியில் அமர்ந்து, படிப்பதை உறுதி செய்யவும். நுாலகத்தின், உள், வெளி பகுதியை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
வாசகருக்கு, குடிக்க வெந்நீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.வாசகர் வட்ட கூட்டம், நுால் அறிமுக விழா மார்ச் 31 வரை நடத்த வேண்டாம். மைய நுாலகங்களில் நடக்கும் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பும், 31 வரை கிடையாது. தொடர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள், நுாலகம் வருவதை தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டு, நுாலக பகுதிகளை கண்டிப்பாக துாய்மைப்படுத்த வேண்டும். 'கொரோனா' விழிப்புணர்வு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews