கொரோனா பாதிப்பு - அரசு ஊழியர், ஆசிரியர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 24, 2020

Comments:0

கொரோனா பாதிப்பு - அரசு ஊழியர், ஆசிரியர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யில் பாதிக்கப்படும் ஏழை , எளிய மக்களுக்கு உதவும் வகை யில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக என்ஜிஓ சங்கம் அறிவித்துள்ளது . முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை , உள்ளாட்சித் துறை , நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை , காவல்துறை , போக்குவரத் துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர் கள் மிகுந்த அக்கறையோடு பணியாற்றி வருகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம் .
இந்த கடினமான சூழ்நிலையில் , கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் , அமைப்புசாரா தொழிலாளர்கள் , தினக்கூலி பணியாளர்கள் , ஏழை எளிய மக்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலும் தமிழக அர சில்பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க இசைவு தெரிவித்துக் கொள் கிறோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews