Search This Blog
Tuesday, March 24, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அங்கன்வாடி மையங்களில், சிறிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தலா, 3,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.
சட்டசபையில், சமூக நலத்துறை தொடர்பாக, 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:*நடப்பாண்டில், 10 ஆயிரத்து, 888 அங்கன்வாடி மையங்களுக்கு, 10.59 கோடி ரூபாய் செலவில், மேஜை, நாற்காலி, இரும்பு அலமாரி போன்ற தளவாட சாமான்கள் வழங்கப்படும். 41 ஆயிரத்து, 133 அங்கன்வாடி மையங்களில், சிறிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, ஒரு மையத்திற்கு, 3,000 ரூபாய் வீதம், 12.34 கோடி ரூபாய் வழங்கப்படும்.
*அங்கன்வாடி மையங்களில், முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இரண்டு இணை வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், தற்போது, 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாண்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, கடலுார், திருவள்ளூர், ஈரோடு, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும், 8.47 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுப்படுத்தப்படும்.*சென்னை, மயிலாப்பூரில், 9.33 கோடி ரூபாய் மதிப்பில், சமூக நல ஆணையரகத்திற்கு, அனைத்து வசதிகளுடன்கூடிய, புதிய கட்டடம் கட்டப்படும்.*புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும், அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம், குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பு, 10.23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.3,000 பராமரிப்பு நிதி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.