Search This Blog
Tuesday, March 24, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பள்ளி, கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான, மாதாந்திர உணவு கட்டணம், உயர்த்தி வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.
சட்டசபையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பாக, 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:*சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில், சமுதாய கூடம், நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை, புதிய அரசு மேல்நிலைப் பள்ளி, தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தல், வேலைக்கு செல்லும் மகளிருக்கான விடுதி கட்டுதல், மதரசா பள்ளிகளுக்கு, இணைய வசதியுடன் கூடிய, கணினி வழங்குதல் போன்ற திட்டங்கள், 24.25 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.*இத்துறையின் கீழ் இயங்கி வரும், 1,301 விடுதிகளுக்கு, டி.டி.எச்., இணைப்புடன், எல்.இ.டி., தொலைக்காட்சி பெட்டிகள், 5.39 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.*பள்ளி விடுதி மாணவர்களுக்கான, மாதாந்திர உணவு கட்டணம், 900 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாகவும்; கல்லுாரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம், 1,000 ரூபாயிலிருந்து, 1,100 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்.
பொங்கல், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம், தீபாவளி பண்டிகை நாட்களில், சிறப்பு உணவு கட்டணமாக, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 20 ரூபாய், 40 ஆகவும்; கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படும், 40 ரூபாய், 80 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.*மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள, பிறமலைக் கள்ளர் பள்ளிகளில், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.*இத்துறையின் கீழ் இயங்கி வரும், 1,354 விடுதிகளில், 1,290 சொந்த கட்டடங்களில், இயங்கி வருகின்றன. இக்கட்டடங்களில் பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ள, 9 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 11 பள்ளி விடுதிகள், 1.98 கோடி ரூபாய் மதிப்பில், கல்லுாரி விடுதிகளாக, நிலை உயர்த்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டணம் உயர்வு - முதல்வர், இ.பி.எஸ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.