11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 24, 2020

Comments:0

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்னும் ஒரு தேர்வு உள்ள நிலையில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு காரணமாக 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்
பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, அத்தியாவசிய பொருட்களான, முக கவசம் மற்றும் கிருமி நாசினி கிடைப்பதை உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:30க்கு துவங்கி மதியம், 1:45 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு மையங்களை அடைவதற்கு, பிரச்னையை சந்திக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அணுகலாம். கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து, குறித்த நேரத்துக்கு மாணவர்கள் வந்து சேர, போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை தவிர்த்து, இந்த கட்டத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது, மாணவர்களின் நலன்களை பாதிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews