அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தற்போது காலியாக உள்ள ஒரு சமூகப் பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு குழந்தைகள் சார்ந்த பணியில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட சமூகப்பணியாளர் பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ariyalur.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621 704 என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.