DGE - 10th பொதுத் தேர்வு ஒத்திவைப்பு சார்ந்து - அரசு தேர்வு கள் இயக்குநரின் செயல்முறைகள் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 22, 2020

Comments:0

DGE - 10th பொதுத் தேர்வு ஒத்திவைப்பு சார்ந்து - அரசு தேர்வு கள் இயக்குநரின் செயல்முறைகள் - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
ஆணை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 27 . 03 . 2020 முதல் 13 . 04 . 2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .
1 . அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 27 . 03 . 2020 முதல் 13 . 04 . 2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது . 2 . தற்போது நடைபெற்று வரும் மார்ச் 2020 பருவத்திற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 23 . 03 . 2020 மற்றும் 26 . 03 . 2020 ஆகிய இரு நாட்களிலும் , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 24 . 03 . 2020 அன்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் . 3 . மேற்குறிப்பிட்டவாறு ஒத்தி வைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த விவரம் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் . 4 . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள விவரத்தினை , அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .
5 . பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பான அறிவிப்பு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும் , அனைவரும் அறியும் வண்ணம் ஒட்டி வைக்க நடவடிக்கை மேற்கெள்ளப்பட வேண்டும் . 6 . முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் , தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் . 7 . வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும் , கட்டுக்காப்பு மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் பணியில் இருப்பதையும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .
கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27 . 3 . 2020 முதல் 13 . 4 . 2020 வரை நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் . இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு , அதாவது 15 . 4 . 2020 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன . 11ஆம் வகுப்பிற்கு 23 . 3 . 2020 மற்றும் 26 . 3 . 2020 நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் , 12ஆம் வகுப்பிற்கு 24 . 3 . 2020 நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.
10 ம்வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு. தமிழ்ப்புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும். 11,12 வகுப்பு எஞ்சிய தேர்வுகள் திட்டமிட்டபடி வழக்கம்போல் நடைபெறும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews