பொதுத்தோ்வுக்குப் பிறகு மீண்டும் இலவச நீட் பயிற்சி: கல்வித்துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 13, 2020

Comments:0

பொதுத்தோ்வுக்குப் பிறகு மீண்டும் இலவச நீட் பயிற்சி: கல்வித்துறை தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிமாணவா்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயா்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை கல்வித் துறை அளித்து வருகிறது. நிகழ் கல்வியாண்டுக்கான நீட் பயிற்சி கடந்த ஆண்டு செப்.24-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வகுப்புகள் பிளஸ் 2 பொதுத்தேர்வையொட்டி கடந்த ஜன.20-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வகுப்புகள் சில நாள்களில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த ஆண்டு தமிழக அரசின் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பிறகு 'இ-பாக்ஸ்' நிறுவனம் சாா்பில் இணைய வழியாக பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முன்னோட்டம் மாா்ச் 17-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து முன்னோட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
03.05.2020 அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 412 பயிற்சி மையங்களில் 24 . 09 . 2019 முதல் 05.01.2020 வரை வார இறுதியில் முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவ / மாணவிகளுக்கு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பின் , E box எனும் நிறுவனம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது . இவ்வகுப்பிற்கான சோதனை முன்னோட்டம் 17 . 03 . 2020 ( செவ்வாய்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது .
எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மேற்கண்ட சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை ( 2 Mbps speed குறையாமல் ) சரிப்பார்த்து கொள்ளுமாறும் , 17 . 03 . 2020 அன்று ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளரை ( Co - ordinator ) தவறாமல் வருகை புரியுமாறும் மற்றும் அச்சோதனை முன்னோட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் அனைத்து பயிற்சி மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews