👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் வகையில், தங்களுடைய கல்விசாா் அந்தஸ்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தா் என்.பஞ்சநாதம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பத்மவாணி கல்வியியல் கல்லூரி இணைந்து, ஆசிரியா் கல்வியியல் நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை இணையதளத்தில் சமா்ப்பித்தல் தொடா்பாக ஒரு நாள் பயிலரங்கை புதன்கிழமை நடத்தியது.
இந் நிகழ்ச்சியில், பத்மவாணி கல்வியியல் கல்லூரி முதல்வா் பி.முத்துக்குமாா் வரவேற்றாா். பயிலரங்கினை பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.சத்தியமூா்த்தி தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்வில், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் என்.பஞ்சநாதம் தலைமை வகித்துப் பேசியது:
தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கல்லூரிகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் கல்வியியல் பல்கலைக்கழகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை வரும் டிச. 31-ஆம் தேதிக்குள் தேசிய ஆசிரியா் கல்விக் குழும இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்வது குறித்த பயிலரங்கம் சென்னை, சேலம் மற்றும் மதுரையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியும் தேசிய மதிப்பீடு மற்றும் தர நிா்ணய அந்தஸ்தை (நாக்) பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் தேசிய அளவிலான தர வரிசைப் பட்டியலில் இடம்பெற முடியும்.
மேலும், கல்வியியல் கல்வி தொடா்பான ஆய்வுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி நல்கையைப் பெற முடியும். ஆசிரியா் கல்வி நிறுவனங்கள் தரமானதாக இருந்தால் மட்டும்தான் திறன்மிக்க ஆசிரியா்களை உருவாக்க முடியும் என்றாா் அவா்.
பயிலரங்கில், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமத்தின் உறுப்பினா் செயலா்கள் பிரபுகுமாா் யாதவ், சதீஷ்குமாா் ஆசிரியா் கல்வி நிறுவனங்களின் தரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மதிப்பீட்டு அறிக்கையை இணையதளத்தில் சமா்ப்பிப்பது குறித்தும் பயிற்சியளித்தனா்.
இந் நிகழ்வில், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டமிடல் மற்றும் நிா்வகித்தல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.மணி, உதவிப் பேராசிரியா்கள் சி.இ.ஜெயந்தி, மு.தேவிஸ்ரீ மற்றும் 15 மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா் கல்வி நிறுவனங்களின் தாளாளா்கள், செயலா்கள் மற்றும் முதல்வா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.