மிக விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியாகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 04, 2019

Comments:0

மிக விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியாகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மிக விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை பொதுவெளியில் வெளியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏஐசிடியில் நேற்று தூய்மையான வளாகம் 2019-க்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வீடியோ கான்ஃபரன்சிங் முறயில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''தினந்தோறும் மாணவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரையாவது சேமிக்கவேண்டும் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும், தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதைப் பின்பற்றுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் (உயர் கல்வி) ஆர்.சுப்பிரமணியம் கூறும்போது, ''புதிய தேசிய கல்விக் கொள்கை பொதுவெளியில் மிக விரைவில் வெளியாக உள்ளது.
கல்விக் கொள்கையை வெளிக்கொண்டு வருவதன் கடைசிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். நம்முடைய கல்வி முறையைச் செயல்படுத்தும் முறைகளை, இந்த புதியக் கல்விக்கொள்கை மாற்றியமைக்கும். மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மிகப்பெரிய மாற்றத்தை கல்விக் கொள்கை கொண்டுவரப் போகிறது'' என்று சுப்பிரமணியன் பேசினார். தூய்மையான வளாகம் 2019-க்கான விருதுப் போட்டியில் சுமார் 7 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவற்றில் 52 நிறுவனங்களுக்கு 'தூய்மையான மற்றும் நேர்த்தியான வளாகம்' என்ற விருது வழங்கப்பட்டது. --- புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தூய்மையான வளாகத்தை கொண்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், 2019ம் ஆண்டு மூன்றாவது தூய்மை தரவரிசை பட்டியலில் 7 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், சுத்தமான மற்றும் சீர்மிகு வளாகம், ஒரு மாணவர் ஒரு மரம் வளர்த்தல், ஜல்சக்தி அபியான் போன்ற பிரிவுகளில் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் பேசுகையில், 'மாணவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை சேமிப்போம் என உறுதியேற்க வேண்டும். தங்களின் நண்பர்கள், உறவினர்களிடமும் இதை வலியுறுத்த வேண்டும்,' என்றார். தொடர்ந்து பேசிய மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் (உயர்கல்வி) சுப்ரமணியன், 'தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். புதிய கல்வி கொள்கை, விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான முக்கிய மாற்றத்தை, இந்த கல்விக் கொள்கை ஏற்படுத்தும். இது உலகிலேயே மிக சிறந்த ஒன்றாக இருக்கும்,' என்றார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews