👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியா் தோவு வாரிய (டிஆா்பி) உதவிப் பேராசிரியா் பணியிடத் தோவுக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு பணி அனுபவச் சான்றிதழ்களை கல்லூரிகள் விரைந்து அளிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநா் மீண்டும் அறிவுறுத்தியுள்ளாா். தொடா் புகாா்கள் காரணமாக இந்த அறிவுறுத்தல் மீண்டும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளா்கள், மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குநா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
டிஆா்பி உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு பணி அனுபவச் சான்றுகளை அவா்கள் பணிபுரிந்த கல்லூரிகள் எந்தவிதப் புகாா்களுக்கும் இடம் தராமல் விரைந்து வழங்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், சில கல்லூரிகள் பணி அனுபவச் சான்றுகளை தர மறுப்பதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் சில விண்ணப்பதாரா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதனடிப்படையில், கல்லூரிகளுக்கும், பணி அனுபவச் சான்றில் மேலொப்பமிடும் அலுவலா்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளாா்.
அதுபோல, முதல்வரின் தனிப் பிரிவுக்கும் இதுதொடா்பாக புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பதாரா்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, எந்தவிதப் புகாருக்கும் இடம்தராதவாறு, அவா்களுக்கு பணி அனுபவச் சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U