ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் அரசியல் காரணங்களால் தள்ளிப்போகுது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 09, 2019

ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் அரசியல் காரணங்களால் தள்ளிப்போகுது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அரசியல் காரணங்களால் தாமதமாகியுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பை, இரண்டு மாதங்களுக்கு முன், பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், தற்போது பணியாற்றும் பள்ளிகளில், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், சமீபத்தில் முடிவுக்கு வந்ததால், கவுன்சிலிங் ஏற்பாடுகளை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. இந்த மாதம், கவுன்சிலிங் நடத்தலாம் என, திட்டமிட்டிருந்தது. ஆனால், அயோத்தி வழக்கில், வரும், 13ம் தேதி தீர்ப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், உள்ளாட்சிதேர்தல், ஒரு மாதத்துக்குள் நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு பின், வெளியாகும் என தெரிகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடியாது.
எனவே, கவுன்சிலிங் நடத்த முடியாத நிலை உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விண்ணப்பம்: இயக்குனர் திடீர் உத்தரவுஆசிரியர்களின் இடமாறுதல் விண்ணப்பங்களை திருப்பி தராமல், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில், பொது மாறுதல் கவுன்சிலிங் தொடர்பாக வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றவர்கள், பொது மாறுதல் கேட்டு விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். அவர்களின் விண்ணப்பங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப் பட்டது. ஆனால், சில மாவட்டங்களில், அவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மறுப்பதால், மீண்டும் வழக்குகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்ந்த மனு எண்ணை தெரிவிக்கும் ஆசிரியர்களிடம், முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று, எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews