??Join Our??WhatsApp??Group??Click Here
??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
ஐஐடி இந்தூர் மாணவர்களுக்கு சாம்சங் புதிய கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சாம்சங் நிறுவனம் சார்பில் மல்டி மாடல் சென்சிங், லேர்னிங் சிஸ்டம், விஆர், எக்ஸ்ஆர், 3டி இமேஜிங், ஏஐ ஆகிய துறைகளில் புதுமையாகவும் நடைமுறையில் பயன்படுத்த முடிகிற யோசனைகளை முன்வைக்கும் ஐஐடி மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஐஐடி இந்தூர் மாணவர்களுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக 'பாடப்புத்தக வாசிப்பு மற்றும் கற்றல் அனுபவத்தில் ஏஆர்/விஆர் முறைகள்' என்ற செயல் திட்டத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அடுத்த 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து சாம்சங் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை பெங்களூரு பிரிவின் மூத்த துணைத் தலைவர் அலோக்நாத் டி கூறும்போது, ''கடந்த 9 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சாம்சங் கண்டுபிடிப்பு விருதுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலந்துகொள்ளும் குழுவினர் திறமை வாய்ந்தவர்களாகவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர்களாகவும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களாகவும் உள்ளனர்.
சாம்சங்கைப் பொறுத்தவரையில் கண்டுபிடிப்பு, எங்களின் டிஎன்ஏவில் ஆழப் பதிந்திருக்கிறது. அறிவுபூர்வமான மனங்களிடையே கண்டுபிடிப்புகளின் கலாச்சாரத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
??Join Our??Facebook??Page??Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U