ஆக்ஸ்போர்டு பல்கலை போட்டி இறுதிச்சுற்றில் மதுரை மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 17, 2019

ஆக்ஸ்போர்டு பல்கலை போட்டி இறுதிச்சுற்றில் மதுரை மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சர்வதேச அளவில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் நடத்தும், புத்தக வாசிப்பு மற்றும் கட்டுரைப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு, மதுரையைச் சேர்ந்த மாணவி தேர்வாகி உள்ளார். ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகம், துவக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான, சர்வதேச அளவிலான புத்தக வாசிப்பு மற்றும் கட்டுரை போட்டிகளை, ஆண்டுதோறும் நடத்துகிறது. 'ஆக்ஸ்போர்டு பிக் ரீட் ஏசியா சேலஞ்ச்' என்ற பெயரில், இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில், ஆசிய கண்டத்தில் இருந்து, இந்தியா, சீனா, மலேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, 6,000 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இந்தியாவில் உள்ள, 20 பள்ளிகளில் இருந்து, 300 மாணவர்கள் பங்கேற்றனர். இதன் இறுதிச் சுற்றுக்கு, ஆசியாவில் இருந்து, ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.அதில், மதுரையைச் சேர்ந்த பி.ஆர்.நிமீஷா என்ற மாணவியும் தேர்வாகி உள்ளார். இவரைத் தவிர, மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து, நான்கு மாணவர்களும்; சீனாவில் இருந்து இருவர்; பாக்., மற்றும் மலேஷியாவில் இருந்து தலா ஒருவரும் தேர்வாகி உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews