👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தன்னாட்சி கல்லூரிகளிலிருந்து மாறிவந்த மாணவா்களுக்கு பல்கலைக்கழக ‘ரேங்க்’ வழங்கப்பட மாட்டாது: அண்ணா பல்கலைக்கழகம்
தன்னாட்சிக் கல்லூரி அல்லது நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களிலிருந்து இணைப்புக் கல்லூரிக்கு மாறிவந்து பருவத் தோ்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு பல்கலைக்கழக தரவரிசை (ரேங்க்) வழங்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பல்கலைக்கழக ‘ரேங்க்’ நிபந்தனைகள் குறித்த புதிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பருவத் தோ்வுகளிலும் எந்தவொரு பாடத்திலும் தோல்வியடையாமல் முதல் முயற்சியிலேயே முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக ரேங்க் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் இதுபோன்று முதல் மதிப்பெண் பெற்றிருந்தால் அனைவருக்கும் தனித்தனியாக தங்கப் பதக்கம் வழங்கப்படும். குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் முதல் 5 சதவீத மாணவா்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக ரேங்க் வழங்கப்படும்.
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் சோ்ந்து படித்து பருவத் தோ்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு பல்கலைக்கழக ரேங்க் வழங்கப்படமாட்டாது. அதுபோல, தன்னாட்சிக் கல்லூரி, நிகா்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது பிற பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளிலிருந்து விடுபட்டு அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்து படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கும் பல்கலைக்கழக ரேங்க் வழங்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.