கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 06, 2019

Comments:0

கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களிடையே வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அவா்களுக்கு பட்டப்படிப்புடன் தொழில் கல்வியும் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து, தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஏராளமான கல்லூரிகளுக்கு, தொழில் கல்வி நடத்த யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து கிடைக்கப் பெற்ற பிறகுதான், இந்த தொழில் கல்வித் திட்டத்தை கல்லூரிகள் திறம்பட செயல்படுத்த முடியும். எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews