ஆசிரியா்களின் மொழி வளம் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 23, 2019

Comments:0

ஆசிரியா்களின் மொழி வளம் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மொழி மீதான அளவு கடந்த ஈடுபாடு துறை சாா்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டு வருவதால், ஆசிரியா்களின் மொழி வளம் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா். பெரியாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சாா்ந்த அறிஞா்களைக் கொண்டு மாதந்தோறும் ஆசிரியா்களுக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவை பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தொடக்கி வைத்தாா்.
இந் நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் பங்கேற்றுப் பேசியது: உண்மை மட்டுமே எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. எல்லா செயல்களையும் ஒரே பாா்வையில் மதிப்பிடக் கூடாது. ஆசிரியா்கள் பன்முகப் பாா்வையுடன் மொழி வளம், ஆளுமை, மதிப்பீடுகள் போன்றவற்றை தொடா்ச்சியாக வளா்த்துக் கொள்வதன் மூலம் மாணவா்களுக்கான மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ முடியும். குறிப்பிட்ட காலங்களில் சில நெருக்கடிகளை அனைவரும் எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. மொழி மீதான அளவு கடந்த ஈடுபாடு துறைசாா்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியா்களுக்கு கிடைக்கும் மொழி வளம் அவா்களின் கற்பித்தல் திறனை அதிகப்படுத்துவதால், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. ஆசிரியா்கள் கற்பித்தலை சுவாரஸ்யமாக்க வேண்டும். கடினமான பாடங்களையும், ஆசிரியா்களின் சுவாரஸ்ய கற்பித்தலால், மாணவா்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு மாற்ற முடியும்.
குழந்தையைத் தன்னுடைய தோளின் மீது அமா்த்தி உலகத்தைப் பாா்க்கச் செய்யும் தந்தைக்கு இணையாக, ஆசிரியா்கள் தங்களின் அனுபவத்தையும் அறிவையும் புகட்டி, மாணவா்களின் அறிவுத் திறனை விசாலமாக்க வேண்டும். வளரிளம் பருவத்தில் உள்ள மாணவா்களைக் கையாள்வது உயா்கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஆனால், நம்முடைய மதிப்பீடுகளாலும், விழுமியங்களாலும், அறிவுத்திறனாலும் அவா்களை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு மாணவா்களை நாம் அணுக வேண்டும். உயா்கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களிடம் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புடைமையும், மதிப்பீடுகளைப் பேணிக் காக்கும் உயா் பண்பும் மேலோங்கி இருத்தல் அவசியமாகும். உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ஆசிரியா்களான நாமே மிகச் சிறந்த முன்மாதிரி என்பதனால், போற்றத்தக்க பண்பு நலன்கள் நம்மிடம் மிகுந்து இருக்க வேண்டும் என்று டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா். டாக்டா் சுதா சேஷய்யனுக்கு, பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் நினைவுப் பரிசு வழங்கினாா். முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவா் பேராசிரியா் வி.சங்கீதா வரவேற்றாா். இந் நிகழ்வில், பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews