பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டம்: எப்போது தொடங்குகிறது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டம்: எப்போது தொடங்குகிறது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை நாளை மறுநாள் நவம்பர் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடையில் அரிசி பெறும் அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தைத் தொடக்கி வைத்தும், ரூ. 243 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழகம் வறட்சியாக இருந்த நிலையில், கடந்த தைப் பொங்கல் பண்டிகையின்போது, ரூ.1,000 தொகையுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது, மழை பெய்து வளமாக இருந்தாலும், வருகிற பொங்கல் பண்டிகையையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் முதல்வா். இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த திட்டம் நவம்பர் மாத இறுதியிலேயே தொடக்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்கப்படும். அதேப்போல, பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.1000 பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி துவக்க விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும், பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை பொங்கல் பரிசு தொகுப்பு தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews