கைவிட்டு போனது 'கனவு ஆசிரியர்' விருது: ஆசிரியர்கள் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2019

Comments:0

கைவிட்டு போனது 'கனவு ஆசிரியர்' விருது: ஆசிரியர்கள் அதிருப்தி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோருக்கு நல்லாசிரியர் விருதையடுத்து 'கனவு ஆசிரியர்' விருதும் இந்தாண்டு கைவிட்டு போனதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சிறப்பாக பணியாற்றிய 374 பேருக்கு செப்., 5 ல் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஜனவரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பெயர், கடைசி நேரத்தில் விருது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தகுதி இருந்தும் பலருக்கு விருது கைவிட்டுப்போனது.தற்போது கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள விண்ணப்பித்து மாவட்ட பட்டியல் விபரம் இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. இதிலும் போராட்டத்தில் பங்கேற்றோரது விபரம் சேகரிக்கப்பட்டு கடைசி நேரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கனவு ஆசிரியர் விருதும் பறிபோகும் அச்சம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறியதாவது:நல்லாசிரியர் விருதுக்கு போலீஸ் ஸ்டேஷனில் தடையில்லா சான்று பெற வேண்டும் உள்ளிட்ட சில நடைமுறைகள் இருந்தன. ஆனால் கனவு ஆசிரியர் விருது என்பது ஆசிரியரின் புதுமையான கற்பித்தல் உள்ளிட்ட சிறப்பு காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இதிலும் போராட்டத்தில் பங்கேற்றதற்காக விருது வழங்காமல் அரசு பழிவாங்க கூடாது என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews