👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கல்லூரிக் கட்டணத்தையே விஞ்சும் அளவுக்கு, பள்ளிக் கட்டணம் தாறுமாறாக இருக்கிறது என்பது நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 10-வது மற்றும் அதற்குட்பட்ட வகுப்புகளுக்கே ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமாகக் கல்விக் கட்டணம் பெறும் தனியார் பள்ளிகள் பல உண்டு. `இந்த நிலைமையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை' என ஆதங்கப்பட்டுக்கொண்டு, மாதம்தோறும் குடும்ப பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை பிள்ளையின் படிப்புக்கென்று ஒதுக்கீடு செய்யும் குடும்பங்கள்தான் சமூகத்தில் அதிகம்.
குழந்தைகள்
ஆங்கில மொழி மோகம், கல்லூரி மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற எதிர்காலத் தேவைகள் காரணமாக இன்றைக்கு ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.
அதேசமயம் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்காக, கலங்கவும் செய்கின்றனர். பல குழந்தைகள், இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட நிலையெல்லாம் தற்போது மாறி, ஒரு குழந்தையே போதும் என்ற முடிவைத் தேர்வு செய்கிறார்கள் நகரத்துப் பெற்றோர்கள். இதற்குக் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முக்கிய காரணமாக முன்வைக்கின்றனர். அந்த அளவுக்கு பிள்ளைகளின் படிப்புச் செலவுகள் இன்றைய பெற்றோர்களை கலங்க வைக்கின்றன. இதுகுறித்து பெற்றோர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள எளிமையான சர்வே...
Click Here For Survey
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U