👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பிரதமர் மோடியால், நேற்று துவக்கி வைக்கப்பட்ட 'பிட் இந்தியா' திட்டத்தை வரவேற்று, கோவையில் கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.மத்திய அரசின் சார்பில், டிஜிட்டல் இந்தியா, யோகா தினம், ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்திய ஹாக்கி ஜாம்பவனான, தயான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ஆக., 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வரிசையில், 'பிட் இந்தியா மூவ்ெமன்ட்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார்.கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள், உடல் திறனை வளர்த்துக் கொள்ளவும், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை பின்பற்றவும், இத்திட்டம் துவங்கப்பட்டது. இதற்கான உறுதிமொழியை அனைத்து கல்லுாரி மாணவர்களும் எடுக்க வேண்டும் என, கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
கோவை, ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், சாவடி - ஏ.ஜே.கே., கல்லுாரி வரை பேரணி நடத்தப்பட்டது. கல்லுாரியில், மோடியின் சிறப்புரை திரையிடப்பட்டது.* ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், சிறப்பு விருந்தினராக தடகள வீரர் முகமது நிஜாமுதீன் பங்கேற்று, மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார். கல்லுாரி முதல்வர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதுபோல், கோவையின் பல்வேறு கல்லுாரிகளில் நடந்த, 'பிட் இந்தியா' நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U