போலி பட்டப்படிப்பு சான்றிதழ் விற்பனை: விசாரணை குழு அமைக்க யுஜிசிக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2019

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் விற்பனை: விசாரணை குழு அமைக்க யுஜிசிக்கு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பல்கலைக்கழகங்களில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இதுகுறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி செல்லாமல், தேர்வுகள் எழுதாமல், பட்டப்படிப்பு முடித்ததாக போலி சான்றிதழ்களை மாணவர்கள் வைத்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து அத்தகைய போலி சான்றிதழ்களை பெற்று, மாணவர்களுக்கு சில இடைத்தரகர்கள் விற்பனை செய்வதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியான பதிவில், சில பல்கலைக்கழகங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து, இது குறித்து விசாரணை செய்வதற்கு உயர்நிலைக் குழு அமைக்குமாறு யுஜிசிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்யும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இடைத்தரகர்களை அடையாளம் கண்டு அவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews