👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பழங்குடியினத்தவருக்கான குறைவு பணியிடங்களில் ஆய்வக உடனாளர் (கிரேடு 2) காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
மின்தூக்கி உடனாளர் ஒரு பணியிடத்துக்கு பணிமனையில் பயிற்சியை மனநிறைவடையும் வகையில் முடித்ததற்கான கண்காணிப்பாளரின் சான்று மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ராணுவத்தில் வழங்கக்கூடிய மூன்றாம் நிலை ஆங்கில சான்று பெற்றிருக்க வேண்டும். 18முதல் 35 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
செவிலிய உதவியாளர் (கிரேடு 2) இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இந்திய ராணுவத்தில் வழங்கக்கூடிய மூன்றாம் நிலை ஆங்கில சான்று மற்றும் அரசு மருத்துவ நிலையங்களில் செவிலிய உதவியாளர் பயிற்சியை முடித்தமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு முதல்வர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை 3, ெதாலைபேசி எண் 044-25305551 என்ற முகவரியில் அணுகலாம். விண்ணப்பங்களை ராஜீவ்காந்தி அரசு ெபாது மருத்துவமனை, ெசன்னை-3, அடுக்குமாடி கட்டிடம்-1, அறை எண் ‘‘115சி’’யில் பெறலாம்.
விண்ணப்பங்கள் நாளை முதல் 11ம் தேதி வரை வழங்கப்படும். 13ம் தேதி விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U