👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கு, இலவச சீருடைகள் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணி திட்டம், சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றில் இடம் பெறுவர். இவர்களில், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, இலவசமாக சீருடைகள் வழங்கப்படுகின்றன.சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவியருக்கு, சீருடைகளை, மாணவர்களின் சொந்த செலவில் தைக்க அறிவுறுத்தப்படுகிறது. இதில், சாதாரண, ஏழை குடும்ப மாணவ, மாணவியர், சீருடை வாங்க பணம் கட்ட முடியாததால், சாரணர் இயக்கத்தில் சேர தயங்குகின்றனர்.இந்நிலையில், சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச சீருடை வழங்க வேண்டும் என, பள்ளி கல்வி துறையிடம், சாரணர் இயக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சாரணர் இயக்க தலைவரும், முன்னாள் பள்ளி கல்வி இயக்குனருமான, மணி, சாரணர் இயக்க கமிஷனரும், பள்ளி கல்வி முன்னாள் இயக்குனருமான, இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சர், செங்கோட்டையனிடம், இந்த கோரிக்கையை வைத்தனர்.இதையடுத்து, 'மாணவ, மாணவியருக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், சாரணர் இயக்கத்துக்கான சிறப்பு சீருடையை இலவசமாக வழங்க பரிசீலிக்கப்படும்' என, அமைச்சர் தெரிவித்துள்ளார். முதல்வர், இ.பி.எஸ்.,சிடம், அனுமதி கிடைத்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U