துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 17, 2019

துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
:'சிறப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும், 21ம் தேதி அசல் சான்றிதழ் கிடைக்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி அடையாதவர்களுக்கும், தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுத முடியாதவர்களுக்கும், ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஏற்கனவே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிலையில், அவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ், 21ம் தேதி வழங்கப்படும் என, அரசு தேர்வு துறை அறிவித்துஉள்ளது.மாணவர்களுக்கும், தனி தேர்வர்களுக்கும், தேர்வு எழுதிய மையங்களிலேயே, சான்றிதழ்கள் கிடைக்கும் என, தேர்வு துறை இயக்குனர், உஷாராணி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews