கல்லூரி விடுதியில் மின்சாரம் இல்லாததால் எலி மருந்தில் பல் துலக்கிய மாணவி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 04, 2019

கல்லூரி விடுதியில் மின்சாரம் இல்லாததால் எலி மருந்தில் பல் துலக்கிய மாணவி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மெரினா காமராஜர் சாலையில் அரசு லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி, பயின்று வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த மாணவி ஒருவர் இக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை விடுதியில் மின்சாரம் இல்லாத சமயத்தில், இவர் பல் துலக்க சென்றுள்ளார். அப்போது, பேஸ்ட் வைக்கும் இடத்தில் எலி மருந்து பேஸ்ட்டும் இருந்துள்ளது. இதை கவனிக்காத மாணவி, பேஸ்ட்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்ட்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். சிறிது நேரம் கழித்துதான் பல் துலக்கியது எலி மருந்து என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தெரியாமல் எலி மருந்தை எடுத்து பல் துலக்கினாரா அல்லது வேறு யாரேனும் வேண்டுமென்றே எலி பேஸ்ட்டை எடுத்து வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews