👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதிய கல்விக்கொள்கை குறித்து, சுதந்திர தின உரையில், தான் கூறிய கருத்துக்களையே, மத்திய அரசிடம், தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய உள்ளார் என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று டில்லியில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், விளையாட்டுத்துறை இணை அமைச்சர், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்புகளின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவியை, விரைந்து தரும்படி வலியுறுத்திய செங்கோட்டையன், பின், நிருபர்களிடம் கூறியதாவது:அனைத்து ஊராட்சிகளிலும், விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு, 64.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, 28 ஆயிரத்து, 957 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் பள்ளிகளில், &'சி.சி.டி.வி&' கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நிதி ஒதுக்கும்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம், கோரிக்கை வைத்தேன்.நிதியமைச்சர், தமிழகத்தின் பல்வேறு நிலைமைகளை பகிர்ந்து கொண்டார்.வியைாட்டு துறை அமைச்சரிடம் பேசும்போது, சிம்லாவில் உள்ளது போல, தமிழகத்தின் நீலகிரி போன்ற உயரமான மலைப்பகுதிகளில், விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டுமென, கேட்டுக் கொண்டேன்.புதிய கல்விக் கொள்கை விஷயத்தில், தமிழக மக்களின் உணர்வுளை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துகளைத்தான், தன் சுதந்திர தின உரையில், முதல்வர் வெளிப்படுத்தியிருந்தார். அவற்றையே, தமிழக அரசின் சார்பில், அவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். இவ்வாறு, செங்கோட்டையன், கூறினார்.
டெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார்.
அப்போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U