காஷ்மீர் விவகாரம் : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 11, 2019

காஷ்மீர் விவகாரம் : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய பல்கலைக்கழகத்தில் நோட்டீஸ் ஒட்டியதாக கூறி 5 மாணவிகள் உட்பட 30 மாணவ மாணவிகளுக்கு விளக்கம் கேட்டு பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீலக்குடி என்ற பகுதியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் பரவலாக இருந்து வருகின்றன.
இந்நிலையில், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 30 மாணவ- மாணவியர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து ஒன்றுகூடி பேசியதாக கூறப்படுகிறது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாகவும் தெரிகிறது. இதனைக் கேட்ட பேராசிரியர்களிடம் தகாத வார்த்தைகளால் மாணவ- மாணவிகள் பேசியதாகவும் கூறி மத்திய பல்கலைக்கழக ஒழுக்க நெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் விளக்கம் கேட்டு 30 மாணவ- மாணவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews