👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
"மேற்கு வங்க அரசு ஊழலைத் தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை எப்படி துணிச்சலானது என்று விவரிக்கவும்" எனவும் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மொழிப்பாட தேர்வில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தால் சமூகத்தில் எவ்வாறு பதற்றம் ஏற்படுத்தப்படுகிறது என்பதை விளக்குமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் சென்று ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடுகின்றனர். இதனால் மிகவும் கோபத்துக்கு ஆளாகும் மம்தா பலமுறை முழக்கமிடும் கும்பலை நோக்கி சீறிப் பாய்ந்துள்ளார்.
இச்சூழலில் அந்த மாநிலத்தில் ஹூக்ளியில் உள்ள அக்னா யூனியன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 10ஆம் வகுப்புக்கான வங்க மொழிப்பாடத் தேர்வில் "ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எவ்வாறு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஒரு செய்தி அறிக்கையாக எழுதுக" என்ற வினா கேட்கப்பட்டுள்ளது
மேலும், "மேற்கு வங்க அரசு ஊழலைத் தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை எப்படி துணிச்சலானது என்று விவரிக்கவும்" எனவும் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர் சுபாஷிஷ் கோஷ் என்று தெரியவந்துள்ளது. இவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, பள்ளி நிர்வாகக் குழு கூட்டத்தில இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U