'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை: அரசு மவுனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை: அரசு மவுனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''ஜாக்டோ - ஜியோ விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டசபையில்விவாதிக்க இயலாது'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: தி.மு.க. - தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட 1990 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்; ஏராளமானோர் பணி இடமாறுதல் செய்யப் பட்டுள்ளனர்;பலருக்கும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். அவர்களை அழைத்து முதல்வர் பேச வேண்டும். அமைச்சர் ஜெயகுமார்: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து சபையில் விவாதிக்க முடியாது.இவ்வாறு விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews