👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விமுறையில் பயின்ற 500 மாணவர்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்ட மதிப்பெண் சான்றிதழ் வாங்கியதற்காக மூன்று அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்யப்பபட்டு இருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனரகத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பயின்ற 500 மாணவர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் சுமார் ரூ. 25 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு போலியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதற்கட்டமாக 3 பேர் மீது வழக்கபதிவு செய்திருக்க்கிறார்கள். அதாவது தொலைதூர கல்வி கட்டுப்பாட்டாளர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி, கணினி கட்டுப்பாட்டாளர் கார்த்திக் செல்வம் ஆகிய 3 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணை என்பது கூடிய விரைவில் தொடங்க இருப்பது தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தகுதியான மாணவர்களுக்கு இதுபோன்ற போலிச்சான்றிதழ் வழங்கியது தெரிய வந்துள்ளது.
இது எப்படி தெரிய வந்தது என்றால் ஒரே மதிப்பெண் கொண்டு இரு சான்றிதழ்களும் இருந்துள்ளதால் மாணவர்கள் கண்டுபிடித்தனர். ஒரே மதிப்பெண் கொண்டு இரு சான்றிதழ்கள் உள்ளன என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக இந்த 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவும் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறையினர்க்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த விசாரணை கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விசாரணையில் மேலும் எவருக்கும் தொடர்பு உள்ளதா தெரியவரும் என்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U