நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு திட்டமிட்டு மறைத்ததா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு திட்டமிட்டு மறைத்ததா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பிய மற்றும் ரத்து செய்த தகவலை தமிழக அரசு திட்டமிட்டு மறைத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை அமல்படுத்த முடியாத சூழல் உள்ளதால் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியது. ஆனால் ஓராண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அவற்று நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என 2 சட்ட மசோதாக்களை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மசோதாவுக்கு மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தரவில்லை என்று தமிழக அமைச்சர்கள் கூறிவந்தனர். அதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் குறிப்பிட்ட மசோதாக்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை சார்பில் தமிழக சட்டத்துறை செயலாளருக்கு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அரசியல் சட்ட சரத்து 201ன்கீழ் குடியரசு தலைவர் குறிப்பிட்ட மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசு திட்டமிட்டே குறிப்பிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்காமல் திருப்பி அனுப்பிய மற்றும் ரத்து செய்த தகவலை மாணவர்களிடம் மறைத்ததா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தமிழக மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews